'சிலுவையடி' தளத்தின் இன் கலந்துரையாடல் களம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Forum: இஸ்லாமியருக்கான பதில்கள்
இஸ்லாமியருக்கான பதில்கள்

No New Posts   வேதாகமக் கோட்பாடுகள் முரண்பட்டவையா?

October 19, 2019

வேதாகமக் கோட்பாடுகள் முரண்பட்டவையா?

%25E0%25AE%25AA%25E0%25AF%2588%25E0%25AE

 

ஒரு இஸ்லாமிய நண்பர் எங்கோ கொப்பி செய்து முகநூலில் பகிர்ந்து கொண்ட வேதாகமத்துக்கெதிரான சில கேள்விகளுக்கு இக்கட்டுரையில் பதில் தருகிறேன்.

 

அவர் எழுதியவை சிவப்பு எழுத்திலும் ஹைலைட் பண்ணப்பட்டும் உள்ளன. என்னுடைய பதில்கள் கறுப்பு எழுத்தில் இங்கே தரப்படுகிறது.

 

எல்லோரையும் மீட்கும் பொருட்டாக ஏசு சிலுவையில் மறித்தார் என கிருத்துவர்கள் கூறுகிறார்கள்....! பவுலும் பேதுருவும் அறிமுகப்படுத்திய ஏசுவின் துன்பம் மரணம் பற்றிய கோட்பாட்டின் அடிப்படையிலேயே கிருத்துவம் போதிக்கப்படுகிறது..!! .!!இக்கோட்பாடு ஏசுவின் கோட்பாட்டிற்கு முறன்பட்டதேயாகும்..!!

 

/////////எல்லோரையும் மீட்கும் பொருட்டாக ஏசு சிலுவையில் மறித்தார்     என கிருத்துவர்கள் கூறுகிறார்கள்.!////////

இயேசு எல்லாரின் பாவங்களுக்காக மரித்தார் என்று கிறிஸ்தவர்கள் தங்கள் விருப்பத்தின் படி கூறுவதில்லை. அது வேதாகமம் சொல்லும் கருத்தாகும். மரித்தார் என்பது மட்டுமல்ல மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்து எழுந்தார் என்றும் வேதாகமம் கூறுகின்றது.

 

//////// பவுலும் பேதுருவும் அறிமுகப்படுத்திய ஏசுவின் துன்பம் மரணம் பற்றிய கோட்பாட்டின் அடிப்படையிலேயே கிருத்துவம் போதிக்கப்படுகிறது..!! /////////

இயேசுவின் துன்பம் மரணம் என்னும் கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டுமல்ல இயேசுவின்  உயிர்தத்தெழுதல் என்னும் உண்மை நிகழ்வின் அடிப்படையிலும்தான் கிறிஸ்தவம் போதிக்கப்படுகிறது.

 

அது மட்டுமல்ல இக்கோட்பாடுகள் பவுலும் பேதுருவும் அறிமுகப்படுத்தியது என்று யார் சொன்னது? இஸ்லாமிய அறிஞர்கள் இப்படி பொய்களை புனைவதை அப்படியே உண்மை என்று  நம்பி அதை கொப்பி பேஸ்ட் செய்யும் இஸ்லாமிய அப்பாவிகள் இப்படித்தான் மாட்டிக் கொள்கிறார்கள். தம்முடைய துன்பம் மரணம் பற்றி இயேசுவே பல தடவைகள் முன்னறிவித்தார். அது மட்டுமல்ல பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் கூட மீட்பரின் பாடுகள் மரணம் பற்றி அதிகமாக கூறியுள்ளார்கள். பைபிளை நன்கு படியுங்கள்.

 

 ////////இக்கோட்பாடு ஏசுவின் கோட்பாட்டிற்கு முறன்பட்டதேயாகும்..!! //////////

இது மகா பெரும் பொய்யாகும். இயேசுவின் கோட்பாட்டுக்கு இது முரண்பட்டது என்றால் இயேசுவின் கோட்பாடு எது என்பதை உங்களால் கூற முடியுமா? தன்னுடைய பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் போன்றவற்றின் மூலம் உலக மக்களுக்கு மீட்பு உண்டாகும் என்பதே இயேசுவின் கோட்பாடு. இதைத்தான் பவுலும் பேதுருவும் மற்ற அனைத்து சீடர்களும் போதித்தனர்.

இயேசு தன்னுடைய கோட்பாட்டை தம்முடைய வாயாலே சொல்கிறார். கீழே நான் பதியும் வேத வசனங்களை வாசியுங்கள். இவை இயேசு தம்முடைய சொந்த வாயாலே சொன்னது.

· மாற்-10:45/மத்-20:28 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

·         (மத் 26:28) இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

· மத்-17:23 அவா்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்ததெழுந் திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.

·  மாற்-8:31 அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவா்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.

· மாற்-9:31 ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷா் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவா்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவா்; தம்முடைய சீஷா்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.

·        லூக்-9:22 மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.

 

அது மட்டுமன்றி இது தீர்க்கதரிசிகளால் கூட முன்னறிவிக்கப்பட்டிருந்த விடயமாகும். எசாயா 53ம் அதிகாரம் முழுவதையும் படிக்கவும்.

  • ஏசா 53:11 அவா் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரா் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவா்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

 

மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கபடுவதற்கும் ஏசு சிலுவையில் மறிப்பதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது அவனவன் செய்யும் நற்காரியங்களுக்கு ஏற்ப அவனவன் பாவங்கள் மன்னிக்கபடும் என்றே பைபில் கூறுகிறது..!!

 

///////// மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கபடுவதற்கும் ஏசு சிலுவையில் மறிப்பதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது //////////

இது உங்களுடைய சொந்த கருத்து. எந்த ஆதாரமும் அற்றது. ஆனால் வேதாகமம் இவை இரண்டுக்குமிடையில் மிகவும் தொடர்பு இருப்பதாக கூறுகிறது.

  • மாற்-10:45/மத்-20:28 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்
  • (மத் 26:28) இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

 

//////அவனவன் செய்யும் நற்காரியங்களுக்கு ஏற்ப அவனவன் பாவங்கள் மன்னிக்க படும் என்றே பைபில் கூறுகிறது..!! ////////

இப்படி வேதாகமம் ஒரு தடவை கூட சொல்லவில்லை. இப்படி வேதாகமத்தில் எங்கே இருக்கிறது என்று உங்களால் காட்ட முடியுமா? நீங்கள் எப்படிப்பட்ட பொய்யர் என்பது உங்களுக்கு விளங்குகிறதா? பைபிள் சொல்லாத ஒன்றை அது சொல்வதாக இவ்வளளவு தெளிவாக பொய் கூறுகின்றீர்களே. நற்கிரியைகளால் பாவமன்னிப்பு கிடைக்காது.

 

//////////ஆதாம் செய்த பாவத்திற்காக ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்து ஏசுவை பிடித்து தன்டிப்பது நீதியா ?? /////////

எது நீதி என்று கடவுளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. மேலும் இயேசு தம்மைத் தாமே அடிக்கப்படுவதற்கு ஒப்புக்கொடுத்தார். அவரை யாரும் துரத்திப் பிடிக்க வேண்டியிருக்கவில்லை. தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார்.

 

/////////ஏசு சிலுவையில் துன்பப்பட்டது மனித குலத்தின் பாவத்திற்காக என்றால் ஆதத்தின் ஆதிபாவத்திற்காக ஆயிரம் ஆண்டுகள் கழித்தா கடவுளுக்கு கருனை வரவேண்டும்..!! /////////

அதற்கு முன்பு கடவுளுக்கு கருணை இல்லாமலா இருந்தது?. ஆதியிலிருந்தே தேவன் அன்பானவர்தான். ஆனால் எல்லாவற்றுக்கும் அவர் நியமித்த காலங்களும் சமயமும் ஏற்பட வேண்டும்.

 

 

பாவம் எவ்வகையில் நீக்கப்பட்டது? ஏசுவின் காலம்வரையுள்ள மக்களின் பாவம் நீக்கப்பட்டதா?? இல்லை சமகாலத்திய மக்களின் எல்லா பாவமும் நீக்கப்பட்டதா?? இஸ்ரவேலர்களுக்கு மட்டுக் நீக்கப்பட்டதா?? இல்லை கிருத்துவர்களுக்கு மட்டும் நீக்கப்பட்டதா?? இக்கேள்விக்கு தெளிவான பதில்  எந்த சுவிசேசங்களிலும் இல்லை.!!

 

/////பாவம் எவ்வகையில் நீக்கப்பட்டது? ஏசுவின் காலம்வரையுள்ள மக்களின் பாவம் நீக்கப்பட்டதா?? இல்லை சமகாலத்திய மக்களின் எல்லா பாவமும் நீக்கப்பட்டதா?? இஸ்ரவேலர்களுக்கு மட்டுக் நீக்கப்பட்டதா?? இல்லை கிருத்துவர்களுக்கு மட்டும் நீக்கப்பட்டதா?? ////////

இது சரியாக சிந்திக்கும் ஒருவர் கேட்கக் கூடிய கேள்வி அல்ல.

இயேசுவின் மரணத்தின் மூலம் யாருடைய பாவமும் நீக்கப்படவில்லை. மாறாக இதுவரை வாழ்ந்த, இப்போது வாழுகிற, இனிமேல் வாழப் போகிற யாவருடைய பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்யப்பட்டுள்ளது. அதுவே பலி என்று சொல்லப்படுகின்றது..யாரெல்லாம் அந்த இயேசுவை ஏற்றுக் கொண்டு அந்த பரிகாரம் தனக்காகவும் செலுத்தப்பட்டது என்று நம்புகிறானோ அவனுக்கு அந்த பரிகாரத்தில் உரிமை கிடைக்கிறது. பங்கும் கிடைக்கிறது. அதன்பின் அந்த மனிதன் தான் அந்த பரிகாரத்தை பெறுமுன்னர் செய்த பாவங்கள் அனைத்தையும் கடவுளிடம் அறிக்கை செய்து மன்னிப்பு கேட்கும் போது மன்னிப்பு பெற்றுக் கொள்வான். அதன் பின்பு பாவம் செய்யாமல் இருக்க பரிசுத்தாவியானவரின் உதவியை பெறுகிறான். அவரின் உதவியை உதாசீனம் செய்யாமல் வாழ்ந்தால் பாவமின்றி வாழலாம். பாவம்செய்து வாழ்ந்தால் அவனுக்கு தண்டணை உண்டு.

  • 1யோவா-1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகாிப்பதற்கு அவா் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
  • 1யோவா-1:7 அவா் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவா் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
  • அப்-16:31 அதற்கு அவா்கள்: கா்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் ……

 

/////இக்கேள்விக்கு தெளிவான பதில் எந்த சுவிசேசங்களிலும் இல்லை.!! /////////

சுவிசேஷம்தான் பதில் தர வேண்டும் என்று ஏன் ஒற்றைக்காலில்நிற்கிறீர்கள் சகோதரரே? வேதம் பதில் சொல்லாமல்  இல்லையே? மேலே உள்ளவசனங்களை வாசியுங்கள்.

 

///////// ஏசு கூறுகிறார் இஸ்ரவேலரின் வீட்டாருக்கு அனுப்பபட்டேனேயின்றி மற்றபடியல்ல என்று (மத்-15.24) இஸ்ரவேலருக்கு தூதராக வந்த ஏசு எப்படி உலக மக்களின் அல்லது கிருத்துவரல்லாத மக்களின் பாவங்களை துடைக்க முடியும்?? ஏசு அனுப்பப்பட்டது குறிப்பிட்ட இனத்திற்கு ஆனால் சிலுவையில் மறித்ததோ..! மனிதகுல அனைத்திற்க்கும் என்றால் இது முரண்பாடு அல்லவா ??

 

!! ஒரு தேசிய தூதர் எப்படி அகில உலகத்திற்கு இரச்சகராக முடிந்தது ?? //////////

 

இந்த கேள்விக்கு தெளிவான பதிலை நான் வேறொரு கட்டுரையாக ஏற்கனவே எழுதியுள்ளேன். “இயேசு முழு உலகத்தாருக்கும் அனுப்பபட்டவரா..???’ என்னும் தலைப்பில் அந்த கட்டுரையை எழுதியுள்ளேன். இன்னொரு இஸ்லாமிய நண்பருக்கு பதில் கட்டுரையாக அதை எழுதினேன். விரும்பினால் இந்த லிங்குக்கு சென்று வாசித்துகொள்ளுங்கள். http://www.siluvai.com/2016/09/blog-post.html

 

நீங்கள் எல்லாரும் அதே கேள்விகளைத்தான் திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

 

////////தடுக்கப்பட்ட கனியைதின்றவர் ஒருவர் (ஆதாம்) அதன் சுவையரியாத (ஏசு) இன்னொருவரை தன்டிப்பது நீதியா ?? //////////

 

 

மனிதனை பாவத்திலிருந்து மீட்பதற்காக இயேசு தன்மேல் அதற்கான தண்டணையை ஏற்றுக் கொண்டார் என்று வேதம் சொல்வதை புரிந்து கொள்ள முடியாதவர்களாய் இருக்கிறீர்கள். தேவனுடைய நீதி உங்களுக்கு பைத்தியமாக தோன்றுகிறது. சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாமய் தோன்றும் என்பதை வேதம் சொல்லி விட்டது.

No New Posts   குழந்தைகளை பிடித்து கல்லின்மேல் மோதியடிக்க சொல்வாரா கடவுள்?

October 29, 2014

“உன் குழந்தைகளை பிடித்து கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்” இது கடவுளின் வசனமா? மடவுள் இப்படி கூறுவாரா?

வேதாகமத்தில் 137ம் சங்கீதம் 9ம்  வசனத்தில் உன் குழந்தைகளை பிடித்து கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான் எனும் வசனம் உள்ளது.
இந்த வசனத்தின் அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் இவ்வசனத்தை மேற்கோள் காட்டி வேதாகமத்தை வசைபாடும் இஸ்லாமியர்களின் இம்சை தாங்க முடியவில்லை

வேதாகமத்தில் அகோரமான வசனம் ஒன்றை கண்டுபிடித்து விட்டார்களாம். ஒரு இறைவனின் வசனம் இப்படி கூறமுடியுமா? இறைவன் இவ்வளவு கொடுமையானவரா? என்று அறிவாளித்தனமான கேள்விகளை அவா்கள் கேட்கும் போது அதை நம்பிவிடும் அரைகுறை கிறிஸ்தவா்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவர்களுக்காகவே இச்சிறிய கட்டுரையை எழுதுகிறேன்.
    
வேதாகமத்தை பழித்துரைக்கும் இஸ்லாமியர்கள் ஒரு ஒற்றை வசனத்தை மட்டுமே மேற்கோள் காட்டும் போது அந்த வசனத்தின் முன்பின் இருக்கிற வசனங்களையும் கவனிக்கவேண்டும். அப்போது அவ் வசனத்தின் உண்மை நிலை புரிந்துவிடும். அப்படி புரியாவிட்டால் அந்த அதிகாரத்தை கவனிக்க வேண்டும். அவ் வசனம் கூறப்பட்ட காலம், பின்னணி, யாருக்கு கூறப்பட்டது யாரால் கூறப்பட்டது என்பதை ஆராய்ந்தால் உண்மை நிலையை தெளிவாக புரிந்துகொள்வீர்கள்.

சரி அவ்வசனத்திற்கு முதல் இருக்கிற இரண்டு வசனங்களை வாசிப்போம்

சங்கீதம் 137:7-9
7. கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

8. பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.

9. உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.

7ஆம் வசனத்தில் “கர்த்தாவே” என்று தொடங்கும் போதே தெரியவில்லையா இது கர்த்தர் பேசிய வார்த்தை இல்லையென்று?
மேலும் 8 ஆம் வசனத்தை வாசிக்கும் போது என்ன விளங்குகிறது? யாரோ பாதிக்கப்பட்டவா்கள் பேசுவது போல தெரியவில்லையா?

சரி இவ்வசனத்தின் சரித்திர பின்னணியை சொல்லிவிடுகிறேன்

இஸ்ரவேல் மக்களின் வரலாற்றில் இஸ்ரவேலின் தென் இராட்சியமான யூதாவை யோயாக்கீன் மன்னன் ஆளுகை செய்யும் காலத்தில் எரேமியா தீர்க்கதரிசியாக ஊழியம் செய்தார். அவரது முன் அறிவிப்பின் படி கி.மு 1597-1582 வரையான காலப்பகுதியில் பாபிலோன் மன்னனின் படைகள் தென் இராட்சியமான யூதாவை கைப்பற்றி யூத மக்களை அடிமைகளாக பாபிலோனுக்கு கொண்டுபோய் அவர்களை ஆண்டனர். அப்போது அங்கே அடிமைகளாயிருந்த யூதர்கள் எப்படிப்பட்ட மன நிலையிலிருந்தார்கள் என்பதை வெளிக்காட்டும் அவர்களின் புலம்பல் என்று சொல்லக்கூடிய ஒரு சங்கீதமே இந்த 137ம் சங்கீதம்.

இந்த சங்கீதத்தின் முழுமையான விளக்கத்தை தருகிறேன்.

இந்த விளக்கத்தை படித்த பின்னர் மீண்டுமொருமுறை இந்த பின்னணியை மனதில் கொண்டு இந்த சங்கீதத்தை முழுவதும் படித்துப் பாருங்கள் தெளிவடைவீர்கள்.
அடிமைகளாய் போன யூதர்கள் பாபிலோன் ஆறுகளருகே உட்கார்ந்து கொண்டு தங்கள் சொந்த நாட்டை நினைத்து அழுகின்றனர்.
சோகத்தின் மிகுதியால் வாத்தியங்களை வாசிப்பதை அவா்கள் நிறுத்தியிருந்தனர்.

அப்போது அவர்களை சிறைப்பிடித்தவர்கள் யூதர்களிடம் “உங்கள் பாடல்களை (கர்த்தரை பாடும் பாடல்களை) பாடிக்காட்டுங்கள்” என்று அவர்களை கிண்டல் செய்கிறார்கள்.

இதனால் வேதனையும் கோபமும் அடைந்த யூத மக்கள் தங்களை சிறைப்படித்து வந்தவா்கள் தங்களுடைய குழந்தைகளை கொன்று தங்களுக்கு அநியாயம் செய்தது போல அவர்களுக்கும் யாராவது செய்யமாட்டார்களா? என ஒரு ஆதங்கத்தில் பேசும் வார்த்தைகள் தான் இவை.
   
சரி இந்த பின்னணியை மனதில் வைத்து கொண்டு மீண்டுமொருமுறை இந்த சங்கீதத்தை வாசித்துப் பாருங்கள்.

137 ம்சங்கீதம்
1. பாபிலோன்ஆறுகள்அருகேநாங்கள்உட்கார்ந்து, அங்கேசீயோனைநினைத்துஅழுதோம்.

2.
அதின்நடுவிலிருக்கும்அலரிச்செடிகளின்மேல்எங்கள்கின்னரங்களைத்தூக்கிவைத்தோம்.

3.
எங்களைச்சிறைபிடித்தவர்கள்அங்கேஎங்கள்பாடல்களையும், எங்களைப்பாழாக்கினவர்கள்மங்களகீதத்தையும்விரும்பி: சீயோனின்பாட்டுகளில்சிலதைஎங்களுக்குப்பாடுங்கள்என்றுசொன்னார்கள்.

4.
 கர்த்தரின் பாட்டைஅந்நியதேசத்தில்நாங்கள்பாடுவதெப்படி?

5.
எருசலேமே, நான்உன்னைமறந்தால்என்வலதுகைதன்தொழிலைமறப்பதாக.

6.
நான்உன்னைநினையாமலும், எருசலேமைஎன்முக்கியமானமகிழ்ச்சியிலும்அதிகமாகஎண்ணாமலும்போனால், என்நாவுஎன்மேல்வாயோடுஒட்டிக்கொள்வதாக.

7.
 கர்த்தாவே, எருசலேமின்நாளில்ஏதோமின்புத்திரரைநினையும்; அவர்கள்: அதைஇடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும்இடித்துப்போடுங்கள்என்றுசொன்னார்களே.

8.
பாபிலோன்குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீஎங்களுக்குச்செய்தபடிஉனக்குப்பதில்செய்கிறவன்பாக்கியவான்.

9.
உன்குழந்தைகளைப்பிடித்து, கல்லின்மேல்மோதியடிக்கிறவன்பாக்கியவான்.

---------------------------------------------by-Robert Dinesh-----------------------------------------
 
 
Page 1 of 1  sorted by
Forum Information
Total Posts: 2
Moderator: siluvayadi
No New Posts New Posts
Topic is Closed Sticky


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard