'சிலுவையடி' தளத்தின் இன் கலந்துரையாடல் களம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மரியாளை வணங்கலாமா?


adminn

Status: Offline
Posts: 29
Date:
மரியாளை வணங்கலாமா?
Permalink  
 


 

முன்னோட்டமாக:

 கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவு படத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். இதை உதாரணமாகக் காட்டி: பாருங்கள் அங்கே அவர்களுக்கு தேவையான திராட்சரசத்தை மரியாள்தான் இயேசுவிடமிருந்து வாங்கிக் கொடுத்தாள். எனவே நம்முடைய தேவைக்கு தாயிடம் கேட்டாள், மறுக்காமல் கிடைக்கும் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் சொல்கின்றார்கள். இதுதவறானபுரிந்துகொள்ளுதல்.

 
நான் கொடுக்கும் 10 காரணங்களை படியுங்கள்:

[1] யோவான் 14:6 இயேசு சொன்னார்: "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்". என்னாலேயல்லாமல் ஒருவனும் வேறு வழியாகபரலோகம் செல்லமுடியாது. நான் தான் வழி. மரியாள் அல்ல.

[2] கானாவூர் கலியாணத்தில் ( யோவான் 2:4 ) இயேசு சொன்னார், "ஸ்திரீயே (Woman), உனக்கும் எனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லையே". அம்மா அல்லது தாயே (Mummy/Mom/Mother) என்னும் வார்த்தைகளை அவர் சொல்லவில்லை. ஸ்திரீயே - Woman என்றார். இங்கே "ஸ்திரீயே" என்னும் வார்த்தை மிகவும் மரியாதைக்குரிய கனம்பொருந்திய வார்த்தை யாகும். (Madam என்னும் மரியாதைச் சொல் போல)ஆனால் அதில் உறவு இல்லை. தேவனுக்குத்தான் அம்மா, அப்பா, ஆதி, அந்தம் (துவக்கம் மற்றும் முடிவு) இல்லையே. தாய் என்னும் உறவை இங்கு இயேசு மறுக்கின்றார் . அவர்தான் மரியாளை அவளுடைய தாயின் கர்ப்பத்தில் உண்டாக்கினார். எனவே "மரியாள் ஆண்டவருக்கு தாய், அவளிடத்தில் தான் கேட்கவேண்டும்" என்பது தவறு.

[3] மாற்கு 3:33 இயேசுவைக் காணவில்லையென்று மரியாளும், யோசேப்பும் தேடிவரும் நேரத்தில், அங்கே ஜனங்கள் "உம்முடைய தாயாரும் சகோதரரும் உம்மைத் தேடுகிறார்கள்" என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! என் பிதாவின் சித்தம் செய்பவர்களே எனக்கு தாயாரும் சகோதரரும் என்றார். தாய் மற்றும் சகோதரர்கள் என்னும் உறவையும் இங்கே மறுக்கின்றார். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் (God the father) நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.

[4] யோவான் 19:26 ல் இயேசு சிலுவையில் தொங்கும்போதும், "அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்." தெளிவாக ஸ்திரீயே என்றுதான் அழைக்கிறார். இங்கேயும் அந்த உறவு இல்லை.

[5] 1 தீமோ 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் (mediator) ஒருவரே . அவரே இயேசு என்று வாசிக்கிறோம். இயேசுதான் மத்தியஸ்தர், குறுக்கே மரியாளை மத்தியஸ்தராக கொண்டுவருவது தவறு.

[6] அப் 2-ம் அதிகாரத்தில் மரியாள் பெந்தெகொஸ்தே என்னும் நாளில் 120 பேரில் ஒருவராக இருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றாள். அந்நிய பாஷைகளில் பேசினாள். அந்த கூட்டத்தாரை அவள் சேர்ந்திருந்தாள். கத்தோலிக்க கூட்டத்தாரை அல்ல.
 
[7] யோவான் 14:13,14 "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்." என் நாமத்தில் என்று இயேசு சொன்னார். மரியாளின் நாமத்தில் கேட்பது தவறு.
 
[8] இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான பெண்தான்! அதில் சந்தேகமில்லை. சோறு சமைக்கவேண்டும் என்றால் ஒரு பாத்திரம் (cooker) தேவைப்படுகின்றது. சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிடவேண்டும். பாத்திரத்தை (cooker) அல்ல. மரியாள் பாத்திரம், இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது பாத்திரத்தைக் கடித்து சாப்பிடுவதுபோல் இருக்கின்றது.
 
[09] யாத் 20:3, 4 "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்".
  
[10]இதற்குப் பின்னும் சிலைகளை வைத்து வணங்கினால் (மரியாள் சிலையானாலும், இயேசுவின் சிலையானாலும்) பரலோகம் செல்ல வாய்ப்பில்லை என்று வெளி 21:8 ல் சொல்லப் பட்டுள்ளது.
 
மரியாளை வணங்குவது பாவம், 
இயேசுவின் சிலையை வணங்குவதும் பாவம்.
 
மரியாளை வணங்குங்கள் என்று பைபிளில் எங்கேயும் இல்லை.

-------------------------------------------http://sridharan.mywapblog.com/--------------------------



-- Edited by hi christians on Wednesday 12th of February 2014 02:26:18 PM



__________________

siluvai.com WEBSITE ---- HI CHRISTIANS fb PAGE ----- இயேசப்பா சூப்பர் மாமே fb PAGE ----- நான் என் தேவனுடன் WEBSITE 



இளைய உறுப்பினர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink  
 

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதரர் அவர்களே,
இணையதள வழி இறைபணிபுரியும் தங்களை வாழ்த்துகிறேன்.
தாங்கள் பயிற்றுவிக்கப்படும் ஆவிக்குரிய சபையின் கருத்துக்களை பின்பற்றி உங்கள் பதிவுகள் இருப்பது வரவேற்கதக்கதாயினும், பிறிதொரு சபையின் கருத்துக்களை மேலோட்டமாக தெரிந்து கொண்டு விமர்சிப்பது சரியல்ல என்பது என் கருத்து.
கத்தோலிக்க திருச்சபையின் போதனை, அன்னை மரியாவை ஆராதிக்கவேண்டும், அவர் மூலமாகவே பிதாவிடத்தில் செல்ல வேண்டும் என்பதாக எப்போதும் இல்லை. (பார்க்க: உங்கள் இரண்டாம் காரணம் 1`)(1)தங்களிடம் அப்படிப்பட்ட போதனை ஆதாரங்கள் இருப்பின் தாருங்கள்.
இத்தொகுப்பில் மரியாள் குறித்து உரையாடுவோமா சகோதரரே!

(2)மரியாளின் புகழ் பாடலை வேதத்தில்(லுக்கா எழுதிய சுவிஷேசம் / நல்ல செய்தி) பார்ப்போமானால் "இந்நாள் முதல் எல்லா தலை முறையும் என்னை பேறு பெற்றவள் என போற்றுமே" என்கிறாரே அன்னை? அவரை பேறு பெற்றவராக போற்றுவதில் என்ன குறை கண்டீர்கள்?

(3) உங்கள் முன்னோட்டத்தில் குறிப்பிடும் கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவு படத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். இதை உதாரணமாகக் காட்டி: பாருங்கள் அங்கே அவர்களுக்கு தேவையான திராட்சரசத்தை மரியாள்தான் இயேசுவிடமிருந்து வாங்கிக் கொடுத்தாள். எனவே நம்முடைய தேவைக்கு தாயிடம் கேட்டால், மறுக்காமல் கிடைக்கும் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் சொல்கின்றார்கள். "இதுதவறானபுரிந்துகொள்ளுதல்." என்கிறீர்கள்.
என்னுடைய வேளை ( நேரம்) இன்னும் வரவில்லை என்று சொன்ன யேசு, வேளை வராவிட்டாலும் தன் தாயின் நம்பிக்கையான பரிந்துரையின் படி தண்ணீரை முதல் தர திராட்சை ரசமாக மாற்றி தந்தாரா/ இல்லையா?
"அன்னையி பரி ந்துரை இயேசுவினால் (தன் வேளை வரவிட்டாலும்)மறுக்கப்படுவதில்லை' என்பதற்கான வேதத்தின் அக சான்று இது.

(4)"தாய் என்னும் உறவை இயேசு மறுக்கின்றார்' என்று போதிக்கிறீர்கள்.(உங்கள் இரண்டாம் காரணம்) "கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவு படத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்" இது வேதத்தின் வசனம். இது தெளிவாகச் சொல்கிறது 'இயேசுவின் தாய்' என்று. இங்கு மட்டுமல்ல பல் இடங்களிலும் 'இயேசுவின் தாய்' என்பது பதிவு செய்யபட்டிருகிறது. தூய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வசனங்கள் இவை. இதை ('இயேசுவின் தாய்'என்பதை) இயேசு மறுப்பதாக எப்படி புரிந்து கொள்கிறீர்கள் சகோதரரே?


__________________


இளைய உறுப்பினர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink  
 

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதரர் அவர்களே,

எனது பதிவிற்கு மதிப்பளித்து உரையாட முன் வந்தமைக்கு நன்றி. தனி ந‌பர்களுக்கு இடையில் சபைகளுக்கும் இடையில் ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் தொடர்வது ந‌ல்லது.
இரை இயேசு ஜெபித்தாரல்லவா... "தந்தையே, நாம் ஒன்றாயிருப்பது போல, இவர்களும் ஒன்றாயிருப்பார்களாக". அவர் விருப்பம் நிறைவேற பல்வேறு தள‌ங்களில் நடைபெறும் உரையாடல்கள் உதவும்.

எனது பதிவின் எண் ஒன்றிலிருந்து உங்கள் உரையாடல் தொடங்குகின்றது அல்லவா?.
//நண்பரே மரியாளை ஆராதிக்க வேண்டியதில்லை என நீங்கள் சொல்கிறீர்கள்... ஆனால் மாதா சிலைக்கு முன் நின்று ஏன் வணங்க வேண்டும்?//
ஆராதனை வேறு. வணக்கம் வேறு. இது முதலில் புரிந்து கொள்ள‌ப்பட வேண்டும்.
"திவ்ய இயேசுவே உம்மை (அ)ஆராதித்து (ஆ)வண‌ங்கி (இ) நன்றியுடன் (ஈ) ஸ்தோத்திரம் செய்கின்றோம்' என ஜெபிக்கின்ற கத்தோலிக்க கிறிஸ்தவம், அன்னை மரியிடம் இப்படி சொல்வதில்லை.
க‌பிரியேல் வானதூதருடன் சேர்ந்து 'அருள் நிறைந்தவரே வாழ்க" என அன்னை மரியை வாழ்த்துகின்றார்கள்.எலிஸபெத்தோடு சேர்ந்து 'பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவரே" என சிறப்பு செய்கிறார்கள். "எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும்" என வணங்கி கேட்கிறார்கள்.

__________________


இளைய உறுப்பினர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink  
 

//நண்பரே மரியாளை ஆராதிக்க வேண்டியதில்லை என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் மரியாளின் சிலையை சுமந்து கொண்டு வீதி வீதியாக பவனிகள் நடத்தி பூக்கள் தூவி பாடல்கள் பாடி பஜனைகள் செய்வது ஆராதிப்பதாகாதா? மேலும் மாதாவுக்கென்றே கோவில்கள் ஏன் கட்டப்பட வேண்டும்? மாதா சிலைக்கு முன் நின்று ஏன் வணங்க வேண்டும்?// கத்தோலிக்க திருச்சபை அன்னை மரியாவை ஆராதிப்பது இல்லை. வண‌ங்குவது உண்டு. "இந்நாள் முதல் என்னை எல்லா தலைமுறையும் பேறுடையாள் என் போற்றுமே" என மகிழ்வுடன் பாடும் அன்னையின் கூற்றை தலைமுறை தலைமுறையாய் வீதி வீதியாய் பறை சாற்றும் பவனிகள் அவை. வேதத்தின் அவ்வசனம் இங்கே நிறைவேறுகிறது.

__________________


இளைய உறுப்பினர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink  
 

//கானாவூர் கலியாணத்தில் ( யோவான் 2:4 ) இயேசு சொன்னார், "ஸ்திரீயே உனக்கும் எனக்கும் என்ன? என் வேளை இன்னும்வரவில்லையே. இங்கே "ஸ்திரீயே" என்னும் வார்த்தை மிகவும் மரியாதைக்குரிய கனம்பொருந்திய வார்த்தை யாகும். (Madam என்னும் மரியாதைச் சொல் போல)ஆனால் அதில் உறவு இல்லை. தேவனுக்குத்தான் அம்மா, அப்பா, ஆதி, அந்தம் இல்லையே. தாய் என்னும் உறவை இங்கு இயேசு மறுக்கின்றார் . .//

my view:
"தாய் என்னும் உறவை இயேசு மறுக்கின்றார்' என்கிறீர்கள்.

"கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவு படத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்" இது வேதத்தின் வசனம். இது தெளிவாகச் சொல்கிறது 'இயேசுவின் தாய்' என்று.

இங்கு மட்டுமல்ல பல இடங்களிலும் 'இயேசுவின் தாய்' என்பது பதிவு செய்யபட்டிருகிறது. தூய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வசனங்கள் இவை. இதை ('இயேசுவின் தாய்'என்பதை) இயேசு மறுப்பதாக எப்படி புரிந்து கொள்கிறீர்கள் சகோதரரே?



__________________


இளைய உறுப்பினர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink  
 

//அவர்தான் மரியாளை அவளுடைய தாயின் கர்ப்பத்தில் உண்டாக்கினார். எனவே "மரியாள் ஆண்டவருக்கு தாய், அவளிடத்தில் தான் கேட்கவேண்டும்" என்பது தவறு.//

my view:

கடவுள் தான் மரியாளை அவருடைய தாயின் கர்ப்பத்தில் உண்டாக்கினார் என்பது சரியே. இது வயது முதிர்ந்த எலிசபெத்துக்கும் தெரியும்; ஆயினும் தூய ஆவியின் ஏவுதலால் அவர் சொன்ன" என் ஆண்டவரின் தாய் என்னிடத்தில் வர நான் பேறு பெற்றது எப்படி?'என்பதை மறந்து இங்கு ஆண்டவருக்கு தாய் என்பது தவறு என சொல்கிறீர்க

 மனுஷீகமாக மரியாளை இயேசுவின் தாய் என்றே மத்தேயு , மாற்கு, லூக்கா, யோவான் புரிந்து வைத்திருந்தார்கள். அவர்கள் தான் இயேசுவின் தாய் என்றார்கள்.//
இயேசுவின் தாய் மரியாவை குறித்து தூய ஆவியானால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் எலிசபெத் சொல்லும் வார்த்தை " என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் பேறு பெற்றது எப்படி?"
ஆண்டவரின் தாயை வெறும் சமையல் பாத்திரம், காலி முட்டை ஓடு என வர்ணித்து இழிவு படுத்தும் ஆவிக்குரியவர்கள் எத்தகு ஆவியினால் போதிக்கிறார்கள்?  என பல முறை நான் யோசித்ததுண்டு.
கத்தோலிக்க திருச்சபையினர் தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டு பேசிய எலிசபெத்தோடு இணைந்து "என் ஆண்டவரின் தாயை எமக்கும் தாயாக அடைய யாம் பேறு பெற்றது எப்படி? என இன்றும் வியந்து அகமகிழ்கிறார்கள்.
Show less

 



__________________


இளைய உறுப்பினர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink  
 

your view:

//நான் கொடுக்கும் 10 காரணங்களை படியுங்கள்: [1] யோவான் 14:6 இயேசு சொன்னார்: "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்". என்னாலேயல்லாமல் ஒருவனும் வேறு வழியாகபரலோகம் செல்லமுடியாது. நான் தான் வழி. மரியாள் அல்ல.//


my view:
நீரே எமது ஒளி; நீரே எமது மீட்பு; நீரே எமது வழி இயேசைய்யா என்பதுதான் கத்தோலிக்க விசுவாசமும். இந்த வழியில் முன் சென்ற அன்னை மரியாவின் கரத்தை பிடித்து நடக்கும் பண்பைத்தான் கத்தோலிக்கர் பின்பற்றுகின்றனர். ' புனிதர்களின் உறவை (பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை) விசுவசிப்போரின் வெளிப்பாடுதான் இது. அன்னையின் பரிசுத்தத்தில் எங்களுக்கு அசைக்க முடிய நம்பிக்கை உண்டு.  பாவியான நம்மையே உள்ளங்கையில் பாதுகாத்து வைத்திருப்பவர், நீங்கள் கருதுவது போல காலி முட்டை ஒடாய் , காலி சமையல் பாத்திரமாய் இயேசுவையே கருவில் சுமந்து உலகிற்கு பெற்று தந்தவரை தூக்கி எறிய மாட்டார்.disbelief

 



-- Edited by Devaraj on Wednesday 29th of January 2014 11:47:46 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard