'சிலுவையடி' தளத்தின் இன் கலந்துரையாடல் களம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாலிபனே நீ எங்கே இருக்கிறாய்?


புதிய உறுப்பினர்

Status: Offline
Posts: 4
Date:
வாலிபனே நீ எங்கே இருக்கிறாய்?
Permalink  
 


வாலிபனே நீ எங்கே இருக்கிறாய்?

அன்று தேவன் ஆதாமைப் பார்த்து கேட்டார்  “ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்”?
ஏனெனில் அன்று தேவன் வைத்த இடத்தில் ஆதாம் இல்லை.
தன் நிலை இழந்து தகுதியும் தராதரமும் அற்ற கீழான இடத்தில் ஆதாம் கிடந்தார்.
வாலிபனே நீ விரும்பும் இடத்தில் இருக்க உனக்கு சுயாதீனம் உண்டுதான், ஆனால் எல்லா இடமும் தகுதியானதல்லவே. 


அன்று ஒரு வாலிபன் (யோசுவா) தேவனுடைய ஆசரிப்பு கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.
ஏன் அவனுக்கு வேறு வேலை இருக்கவில்லையா?
வேலைகள் பல இருப்பினும் முக்கியத்துவம் எதற்கு கொடுப்பது என்பதை சரியாக தீர்மானித்திருந்தான்.
தேவன் அவனை தலைவனாக உயர்த்தினார். யாத்-33:11 


அன்று மூன்று வாலிபர்கள் (சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ) தேவனின் பக்கம் இருந்தார்கள்.
உலகமே அதை மடத்தனம் என்று நினைக்கவில்லையா?
உலகம் நினைப்பது எதுவாயிருப்பினும் உத்தமம் எதுவென்று சரியாய் நிதானித்திருந்தார்கள்.
தேவன் அவர்களை தலைவர்களாக உயர்த்தினார்.


“நாம் உலகத்தில் இருந்தாலும் உலகத்தாரல்ல” என்று பவுல் சொன்னார்.
அது அப்படியே மாறி
“நாம் கிறிஸ்தவத்திலிருந்தாலும் கிறிஸ்தவர்களல்ல” என்ற நிலைக்கு வந்து விட்டது கிறிஸ்தவ உலகம்.

உலகம் உலகம் என்று உலகத்தையும் அதிலுள்ளவைகளையும் தூக்கிப் பிடித்து கொண்டு வாழ்பவர்கள் மத்தியில் தேவனின் பக்கம் இருப்பவர்களே தேவனுக்கு தேவை. அவர்களையே நாளைய தலைவர்களாக்குவார்.

இன்று தேவன் உன்னைப் பார்த்த கேட்கிறார் வாலிபனே நீ எங்கே இருக்கிறாய்?

 



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard