'சிலுவையடி' தளத்தின் இன் கலந்துரையாடல் களம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வந்ததன் நோக்கம் எம்மிலும் எம்மூலமும் நிறைவேறுகின்றதா?


இளைய உறுப்பினர்

Status: Offline
Posts: 13
Date:
வந்ததன் நோக்கம் எம்மிலும் எம்மூலமும் நிறைவேறுகின்றதா?
Permalink  
 


வந்ததன் நோக்கம் எம்மிலும் எம்மூலமும் நிறைவேறுகின்றதா?

 

நத்தார் என்றாலே அழகு, மகிழ்ச்சி, குளிரான தருணம், புதிய ஆடை, விடுமுறைகள் என்று குதூகலிக்கும் நாம் ஒரு தடவையாவது யோசித்திருப்போமா? இரட்சகர் வந்ததன் நோக்கத்தை குறித்தும் அது நம்மில் நிறைவேறுகின்றதா என்றும்? 

 

பாவங்களினாலும் சாபங்களினாலும் மரித்திருந்த எம்மை அவர் பிறப்பின் மூலம் விடுதலையாக்கினார் என்பது மாற்றவும் மறுக்கவும் முடியாத உண்மையாகும்... 

 

எபேசியர் 2:1 - அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

 

கொலோசெயர் 2:13 - உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து..

 

வல்லமையும் பராக்கிரமும் மகத்துவமும் நிறைந்த ஆண்டவர் மனுஷனாகிய எம்மீது  வைத்த எதிர்பார்ப்பில்லாத அன்பின் நிமித்தம் தனது மகிமையிலிருந்து இறங்கி வந்தார்... அவர் தாழ்மையின் ரூபமாக இறங்கி வந்தார்.  

 

யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

 

யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது 

 

அவர் இறங்கி வந்ததன் நோக்கம் எமது பாவங்களுக்கு ஜீவாதார பலியாக தன்னை ஒப்புக்கொடுத்து எம்மை மீட்பதே!

 

அந்த அன்பு தெய்வத்திற்கு  கைமாறாக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? அவர் வந்ததன் நோக்கம் எம்மில் நிறைவேற நம்மை நாம் அவருக்கு ஒப்பு கொடுப்போமா? 

 

இன்று ஆண்டவராகிய இயேசுவை அறியாத ஜனங்களுக்கு அவரை அறிவித்து பாவம் என்னும் கொடிய வியாதியிலிருந்து அவர்களை விடுவிப்போம்... நம்மில் அவர் வந்த நோக்கம் நிறைவேற இடம் கொடுப்பதோடு நம் மூலம் அவர் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்.....

 

நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம், எம்மில் பரிசுத்த வாழ்க்கை இருக்கிறதா? ஆண்டவரோடு உள்ள உறவில் எப்படி இருக்கிறோம்? இந்த நத்தாரில் எம்மை முழுமையாக ஆண்டவரிடம் ஒப்பு கொடுப்போமா? 

 

சிந்தித்து தீர்மானம் எடுப்போம்.. எமது வாழ்க்கையை அலங்கரிப்பதன் மூலம் நத்தாரை கொண்டாடுவோம்.. 

 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக....



__________________


புதிய உறுப்பினர்

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

சகோதரி டெபோரா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.இத்தளத்துக்கு வந்து தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி. தொடர்ந்தும் இத்தளத்தில் இணைந்திருங்கள்.

கிறிஸ்துமஸ் அர்த்தமற்று போய்விட்ட காலத்தில் வாழ்கிறோம். காலத்துக்கேற்ற கட்டுரைதான்.

கிறிஸ்தவ உலகம் போகிற போக்கை பார்த்தால் வருகை தாமதித்தால் பயங்கரமாகிவிடும். இப்படியான கட்டுரைகள் கொஞ்சமாவது விசுவாசிகளுக்கு உதவும்

__________________


இளைய உறுப்பினர்

Status: Offline
Posts: 13
Date:
Permalink  
 

Thank u..

__________________


adminn

Status: Offline
Posts: 29
Date:
RE: வந்ததன் நோக்கம் எம்மிலும் எம்மூலமும் நிறைவேறுகின்றதா?
Permalink  
 


சகோதரி டெபோரா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். தங்கள் வருகை மகிழ்ச்சிக்குரியது. தொடர்ந்தும் இத்தளத்தில் இணைந்திருந்து தங்கள் ஆக்கங்களை வழங்குங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். நன்றி



__________________

siluvai.com WEBSITE ---- HI CHRISTIANS fb PAGE ----- இயேசப்பா சூப்பர் மாமே fb PAGE ----- நான் என் தேவனுடன் WEBSITE 

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard