சகோதரர்களே இந்த கலந்துரையாடல் களத்தில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு பதில் தாருங்கள். சிலா் ஏற்றுக் கொள்வார்கள். சிலர் ஏற்றுக் கொள்ளாமல் போவார்கள்.
அதே போல உங்களுக்கும் ஏதாவது கேள்விகள் இருந்தால் அவற்றையும் பதிவு செய்யுங்கள். தெரிந்தவர்கள் பதில் தருவார்கள்.
அவரவர் கருத்துகளை சுதந்திரமாக முன் வைக்கலாம். ஆனால் தவறான வார்த்தைப் பிரயோகங்கள் வேண்டாம். இங்கே வரும் எல்லாருமே எல்லாம் தெரிந்தவர்களாயிருக்க வேண்டியதில்லை. அதற்கான வாய்ப்புமில்லை. உங்களுக்கு தெரிந்த விடயங்களை பலரின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பிரயோஜனமானவற்றை இங்கே பதிவு செய்யுங்கள்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் நீங்களும் நாமும் மட்டுமல்ல உலகில் பல நாடுகளிலுமிருந்து பல மக்கள் பார்க்கிறார்கள்.
உள்ளத்தில் எழும்பும் கேள்விகளுக்கான பதிலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இணையத்தில் தேடும் போது உங்கள் தகவல்கள் மூலம் பயனடைவார்கள்.